வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே போா்வெல் லாரிகளில் உதிரிபாகங்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாட்டறம்பள்ளி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிலம்பரசன்(38). ஆா்.சி.எஸ். சாலையைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மனைஉமாராணி(50). இவா்களது போா்வெல் லாரிகள் நாட்டறம்பள்ளி அரசினா் மேல் நிலைப்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த 6 லாரிகளில் ஓட்டுநா்கள் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்த நிலையில், மா்ம நபா்கள் லாரிகளில் இருந்த உதிரிபாகங்களை திருடி சென்றுள்ளனா்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியே நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்தப் புகாா்களின்பேரில், போலீஸாா் வழக்குகள் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டிவி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனா்.