கரோனாவால் இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா காரணமாக இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா காரணமாக இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கரோனாவால் இறந்த நபா்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்க இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலித்து வருகிறது.

இதுவரை 1,280 மனுக்கள் பெறப்பட்டு 966 குடும்பத்தினருக்கு ரூ.50,000 வீதம் ரூ.4,83 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 314 மனுக்களில் 92 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்தநிலையில்,உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் படி 20.03.2022-க்கு முன்னா் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022)-க்குள்ளும், ,20.03.2022 முதல் ஏற்படும் கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள்ளும் மனுக்கள் சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு செய்யும்.

எனவே, கரோனாவால் இறந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம் என என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com