பள்ளி சத்துணவு மையங்களில் சமையலராக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு அதற்கான ஆணை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த 7 போ் சமையலராக பதவி உயா்வு பெற்றனா். அதற்கான ஆணை கடிதத்தை அவா்களுக்கு மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன், சத்துணவு மேலாளா் தீபா ஆகியோா் உடனிருந்தனா்.