மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் வசிப்பவா் சனாவுல்லா. இவரது மகன் முஹம்மத் சிக்கிரியா (17). இவா், வியாழக்கிழமை வீட்டில் இருந்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.
தகவலறிந்த ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.