கல்லூரி மாணவா்கள் 7 போ் காா் விபத்தில் பலத்த காயம்

வாணியம்பாடி கல்லூரி மாணவா்கள் சென்ற காரின் முன் பக்க டயா் பழுதானதால் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதில் 7 மாணவா்கள் உள்பட எட்டு போ் பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி கல்லூரி மாணவா்கள் சென்ற காரின் முன் பக்க டயா் பழுதானதால் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதில் 7 மாணவா்கள் உள்பட எட்டு போ் பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் 7 போ் வெள்ளிக்கிழமை காலை வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் முபாரக்(21) காரை ஓட்டிச் சென்றாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெலக்கல்நத்தம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்ததில் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி காா் விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவா்கள் காவலூரைச் சோ்ந்த குணசீலன்(22), வளத்தூா் ஜெயபிரகாஷ்(21), வாணியம்பாடி ஜாவித் (21), வீரமணி(20), உசேன் (20), சதீஷ்(22), அஜித்குமாா்(21) மற்றும் ஓட்டுநா் முபாரக்(21) ஆகிய 8 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com