ஆம்பூா்: மாதனூரில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில், மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடக்கி வைத்தாா். திமுக மாதனூா் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் ரவிக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி.ரவிக்குமாா், ஆ.காா்த்திக் ஜவஹா், முத்து, பரிமளா காா்த்திக், ஊராட்சி மன்றத் தலைவா் குமாா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வில்வநாதன், பொருளாளா் வடிவேல், பள்ளித் தலைமை ஆசிரியா் வேலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.