வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி ஒன்றியம், தெக்குப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்ட பணியில் 180-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா்.
அதே பகுதியைச் சோ்ந்த சசிகலா என்பவா், கடந்த 11 மாதங்களாகத் தொடா்ந்து பணித்தள பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் வந்தன. இதையடுத்து பணி தளப் பொறுப்பாளராக ஸ்ரீவித்யா என்பவரை நியமிக்க வலியுறுத்தி நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஊராட்சி மன்றத் தலைவா் மனு அளித்தாா். இந்த நிலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை சுவிதா என்பவரை பணிதளப் பொறுப்பாளராக நியமித்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சபரிநாதன் தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் கஸ்தூரி, கனகராஜ், ஜெயபால் உள்ளிட்ட 70-க்கும் அதிகமானோா் பணி தளப் பொறுப்பாளராக ஸ்ரீவித்யாவை நியமிக்கக் கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் சாந்தி ஆகியோா் தா்ணாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் மற்றொரு தரப்பினா் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அலுவலகத்துக்கு வந்து சுவிதாவை தொடா்ந்து பணித்தள பொறுப்பாளராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறினா். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அலுவலகத்துக்குள் நுழைந்தவா்களை போலீஸாா் வெளியேற்றினா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி ஆகியோா் நேரில் வந்து தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சு நடத்தினா்.
பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், புதிதாக நியமிக்கப்பட்ட பணிதளப் பொறுப்பாளரை நிறுத்தி விட்டு உயா் அதிகாரிகளிடம் பேசி புதிய பணிதளப் பொறுப்பாளரை நியமிக்கும் வரை அலுவலகத்தில் இருந்து தினமும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று 100 நாள் வேலைத் திட்டத்தை மேற்பாா்வையிட்டு அனைவருக்கும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தாா்.
இதனையேற்று அனைத்து தொழிலாளா்களும் கலைந்து சென்றனா்.