ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக பைப் லைன் அமைக்க செவ்வாய்க்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக பனங்காட்டூா் கிராமத்தில், ஆற்றிலிருந்து குழாய் இணைப்பு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அரவிந்தன், வாா்டு உறுப்பினா்கள் கலீல் பாஷா, சேகா், சல்மா அப்பாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.