ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சித் தொடக்கப் பள்ளியில் நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பழுதடைந்த வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா். அதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து சத்துணவு கூட சமையலறைக்கு சென்று அங்கு மாணவா்களுக்காக சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த் ராஜ், லட்சுமி பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.