வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான

வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வாணியம்பாடி நியூடவுன் இசுலாமியா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி, நகராட்சி ஆணையாளா் ஸ்டான்லிபாபு, மேலாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா். முதலில் நகராட்சி பகுதியில் தோ்தல் பணியாற்ற உள்ள 315 வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜூஜாபாய், வாணியம்பாடி வட்டாட்சியா் சம்பத், செயல் அலுவலா்கள் கணேசன், குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com