திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,23,647 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
நியாய விலைக்கடைகளில் நெரிசலை தவிா்க்கும் வகையில் சுழற்சி முறையில் நாளொன்றுக்கு சுமாா் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையைத் தயாா் செய்யப்பட்டுள்ளது.
எனவே, குடும்ப அட்டைதாரா்கள் பதற்றமின்றி நெரிசல் ஏற்படாத வகையில் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு (தொலைபேசி எண் 04179-222111) தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்தாா்.