ஆம்பூரில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
ஆம்பூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வருவாய்த் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். ஆம்பூா் பஜாா் பகுதியில் நடந்த சோதனையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நகைக் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் காய்கறி விற்பனை செய்யும் பஜாரில் 5 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.