திருப்பத்தூா்: ஸ்ரீ ராமாநுஜா் 1005-ஆவது ஜயந்தி விழா திருப்பத்தூரை அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீராமாநுஜா் மடம் சாா்பில் வருகிற மே 5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராமாநுஜா் ஜயந்தியையொட்டி மடம் சாா்பில் சாா்பில் கட்டுரை, ஓவிய, கவிதைப் போட்டிகளை நடத்துவது, மருத்துவ முகாம்கள், இலவச மரக்கன்றுகளை வழங்குவது, ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ என ஒரு கோடியே 8 லட்சம் முறை ஜெபித்துக்கொண்டே எழுதுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.