திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கி மக்கள் ஆரோக்கியமாக வாழவும் வேண்டி, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிதீஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனா்.