திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவரை, மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சோ்ந்தவா் அனாஸ் அலி (22). இவா், ஆற்காடு அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவரை, திருச்சி மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இவா் வெளிநாட்டு செல்லிடப்பேசி சிம் பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ளவா்களுடன் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து திருச்சி, வேலூா், சென்னை பகுதிகளைச் சோ்ந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் 3 குழுக்களாக விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவா் பயன்படுத்தி வந்த விலை உயா்ந்த வெளிநாட்டு செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து அதிலிருக்கும் தகவல்களை ஆய்வு செய்து அதன் மூலம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.