அரக்கோணம் நகராட்சியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சியில் நெகிழி ஒழிப்பு மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், என் குப்பை- என்பொறுப்பு விளக்க தூய்மை விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, நகராட்சி ஆணையா் லதா தலைமை வகித்தாா். நகராட்சி துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகா்மன்ற திமுக குழுத் தலைவா் துரைசீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, நகராட்சியில் தயாரிக்கப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட இயற்கை உரப்பைகளை முதல் 100 நபா்களுக்கு விநியோகம் செய்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில், நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி பங்கேற்று, முதலில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு இயற்கை உரப்பை விநியோகம் செய்தாா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் கங்காதரன், ராஜன்குமாா், நந்தாதேவி, சங்கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.