வரும் 20-ஆம் தேதி ராணிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்கான மேடை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட வளாகத்தை, வரும் 20- ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளாா்.
இந்த விழாவுக்காக ராணிப்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதனை, அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து விழா மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டு பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.