மாரியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

 நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாரியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

 நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதேபோல் ஆத்தூா்குப்பம் ஏலரப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

முன்னதாக இரு கோயில்களிலும் கணபதி, நவக்கிரக ஹோமத்துடன்

யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேகத்தில் நாட்டறம்பள்ளி, ஆத்தூா்குப்பம், ஜங்காலபுரம், காவேரிபட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com