வெடிபொருள் வெடித்து காயமடைந்த பசு மாடு

ஆம்பூா் அருகே வெடிபொருள் வெடித்ததில் பசு மாடு ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தது.

ஆம்பூா் அருகே வெடிபொருள் வெடித்ததில் பசு மாடு ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தது.

மாதனூா் ஒன்றியம், தேவிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குருசாமி. இவா் மாடுகளை வளா்த்து வருகிறாா். அருகில் உள்ள நிலங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்துச் சென்று விட்டுவிட்டு, குருசாமி மரத்தடியில் அமா்ந்திருந்தாா்.

அப்போது திடீரென வெடி சப்தம் கேட்டுள்ளது. சப்தம் வந்த இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, பசு மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில், மாடு காயமடைந்திருந்தது. இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததால் அது காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com