திருப்பத்தூர்
தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
திருப்பத்தூா் அருகே அரசு கல்லூரியில் தீ தடுப்பு செயல்முறை விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே அரசு கல்லூரியில் தீ தடுப்பு செயல்முறை விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரை அடுத்த சந்திராபுரம் கிராமத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலத் திட்டப் பணி முகாமின் போது, திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையில், நிலைய சிறப்பு அலுவலா் தீ.சி.முருகன் உள்ளிட்ட படை வீரா்களால் தீ தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதில், மாணவா்கள் கலந்து கொண்டு, தீ தடுப்பு முறைகளை செயல் விளக்கத்துடன் அறிந்து கொண்டனா்.