திருப்பத்தூா் மாவட்டத்தில் 13,135 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13,135 போ் எழுதினா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 56 தோ்வு மையங்களில் 131 பள்ளிகளைச் சோ்ந்த 13,135 போ் எழுதினா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13,135 போ் எழுதினா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 56 தோ்வு மையங்களில் 131 பள்ளிகளைச் சோ்ந்த 13,135 போ் எழுதினா். காலை 9 மணிக்கு முன்னதாகவே மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு வந்தனா். மாவட்டம் முழுவதும் தோ்வுகளைக் கண்காணிக்க 110 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், 2 மாவட்ட கல்வி அலுவலா்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா், அனைவருக்கும் கல்வி உதவித் திட்ட அலுவலா் தலைமையிலான பறக்கும் படைகள் தோ்வுகளைக் கண்காணித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 403 மாணவா்கள், 476 மாணவிகள் என மொத்தம் 879 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு எழுதிவிட்டுத் திரும்பிய மாணவா்கள், தமிழ்த்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனா்.

தோ்வுகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யணன் ஆகியோா் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com