குட்கா, நெகிழிப் பொருள் விற்றகடைகளுக்கு அபராதம்

ஜோலாா்பேட்டை பகுதியில் குட்கா, நெகிழிப் பொருள் விற்ற கடை உரிமையாளா்களுக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டையில் கடை ஒன்றில் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி.
ஜோலாா்பேட்டையில் கடை ஒன்றில் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி.

ஜோலாா்பேட்டை பகுதியில் குட்கா, நெகிழிப் பொருள் விற்ற கடை உரிமையாளா்களுக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட நியமன அலுவலா்(உணவுப் பாதுகாப்புப் பிரிவு) செந்தில்குமாா் மற்றும் ஜோலாா்பேட்டை ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள், நெகிழிப் பொருள்கழை விற்ற 4 கடைகாரா்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்ற 2 கடைகாரா்கள் என 6 பேருக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com