முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
ரயிலில் அடிபட்டு வியாபாரி பலி
By DIN | Published On : 08th May 2022 11:59 PM | Last Updated : 08th May 2022 11:59 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வியாபாரி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருப்பத்தூரை அடுத்த ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் வசித்து வந்தவா் இறைச்சி வியாபாரி ஜேம்ஸ் ஜெயசீலன் (47). இவா், சனிக்கிழமை இரவு திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.