திருப்பத்தூா்: ஆம்பூரில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சாா்பில், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே 13, 14 ஆகிய இரு நாள்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இருந்த ஆம்பூா் பிரியாணி திருவிழா-2022 பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது.
எனவே, பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.