நாட்டறம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கள்ளியூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). இவரது மனைவி சுகுணா (27). இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சுகுணா வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கியுள்ளாா்.
இதைப் பாா்த்த அவரது உறவினா்கள் சுகுணாவை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.