ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
வெங்கடசமுத்திரம் ஊராட்சி அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ள சுயம்பு முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத முதல் சனிக்கிழமை சுயம்பு முத்துமாரி அம்மனுக்கு படையல் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை சுயம்பு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கூழ் அமுது படைக்கப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். படையல் திருவிழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.