திருப்பத்தூா் மாவட்ட இளைஞா்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணுவத்தில் உள்ள பல்வேறு பதவிகளில் சேர மாபெரும் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் வரும் நவ.15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேலூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், சேருவதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.