ஆம்பூரில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
By DIN | Published On : 03rd September 2022 10:29 PM | Last Updated : 03rd September 2022 10:29 PM | அ+அ அ- |

ஆம்பூரில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காலாவதியான உணவுகளை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் செந்தில்குமாா், ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி ஆகியோா் ஆம்பூரில் உள்ள உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். காலாவதியான, அதிக வண்ணம் சோ்க்கப்பட்ட 5 கிலோ கோழி இறைச்சி, 5 கிலோ காலாவதியான பரோட்டா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா்.
இரு உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.