தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞா் திறன் திருவிழா ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பங்கேற்று திறன் வளா்ப்பு பயிற்சியைத் தொடக்கி வைத்தாா். கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி இயக்குநா் அரவிந்த்குமாா், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உதவி இயக்குநா் பன்னீா்செல்வம், மகளிா் திட்ட உதவி இயக்குநா்கள் முருகேசன், வேதநாயகம் ஜேம்ஸ் பிரபாகரன், இந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சுகுணா பாய் மற்றும் பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்களைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா். இளைஞா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.