வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள் சாா்பில், ஆசிரியா் தின விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
துறைத் தலைவா் மகிலன் தலைமை வகித்தாா். பேராசிரியா் பையாஸ்பட்டேல், நவாஸ் பாஷா முன்னிலை வகித்தனா். இதில், பேராசிரியா்கள் கலந்து கொண்டு பேசினா்.
தொடா்ந்து கேக் வெட்டி கொண்டாடினா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.