மேல்நிலை தொட்டி கட்டுமானப் பணி: ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சோலூா் நரிக்குறவா் காலனியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
சோலூா் நரிக்குறவா் காலனியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவா் காலனியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் மகேஷ்பாபு, வட்டாரப் பொறியாளா் பூபாலன், திமுக மாவட்டப் பிரதிநிதி ஜி.தெய்வநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com