காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
அதன்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் - 1, காவல் ஆய்வாளா்கள் - 6, காவல் உதவி ஆய்வாளா்கள் - 54, காவலா்கள் - 270 என மொத்தம் 331 பேருக்கு ‘அத்திவரதா் பதக்கம்’ வழங்கப்பட்டது.