காலை உணவுத் திட்டம்: அதிகாரி ஆய்வு

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் சத்துணவுத் திட்ட அதிகாரி சீனிவாச சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காலை உணவுத் திட்டம்: அதிகாரி ஆய்வு

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் சத்துணவுத் திட்ட அதிகாரி சீனிவாச சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடா்பாக, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களின் சத்துணவுத் திட்ட அதிகாரி அ.சீனிவாச சேகா், ஆம்பூா் நகா் பி-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி மைய சமையல் கூடம் மற்றும் காலை உணவு வழங்கப்படும் கஸ்பா-ஏ, கஸ்பா-பி, உமா் சாலை, காந்தி சாலை, அழகாபுரம் பகுதிகளில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில், சமையல் செய்யும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்களிடமும் அவா் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com