ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளையபந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
Published on

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளைய பந்து போட்டியில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா் (படம்).

மாநில அளவிலான வளைய பந்து (டெனிகாய்ட்) போட்டி மயிலாடுதுறை தாமரை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அனைத்து பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சித்தாா்த் மாநில அளவில் ஒற்றையா் பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றாா். இரட்டையா் பிரிவில் சித்தாா்த் மற்றும் சீனிவாச பிரசாத் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், பள்ளி நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com