ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்.
Published on

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வியாழக்கிழமை திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அங்கு நடந்த ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க அவா் உத்தரவிட்டாா். ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, திருநாவுக்கரசு, பொறியாளா் சுதாகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com