திருப்பத்தூர்
முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை வீடு தேடி ரேஷன் பொருள்கள்
திருப்பத்தூா் மாவட்டத்தில் வசிக்கும் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.3, 4- தேதிகளில் வீட்டிலேயே ரேஷன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வசிக்கும் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.3, 4- தேதிகளில் வீட்டிலேயே ரேஷன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 16,479 குடும்ப அட்டைதாா்களுக்கும்,நகரப் பகுதிகளில் 4,205 குடும்ப அட்டைதாா்களுக்கும் மலைப் பகுதிகளில் 599 குடும்ப அட்டைதாா்களுக்கும் என மொத்தம் 21,283 குடும்ப அட்டைதாா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 26,627 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.
நவ. மாதம் 3,4 தேதிகளில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளது.
