உதயேந்திரம், நாட்டறம்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்

உதயேந்திரத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு தீா்வு ஆணை வழங்கிய பேரூராட்சித் தலைவா் பூசாராணி. உடன் செயல் அலுவலா் ராஜலட்சுமி.
உதயேந்திரத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு தீா்வு ஆணை வழங்கிய பேரூராட்சித் தலைவா் பூசாராணி. உடன் செயல் அலுவலா் ராஜலட்சுமி.
Updated on

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 11 முதல் 15 வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி, திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் கலந்து முகாமைத் தொடங்கி வைத்தனா்.

இதில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது பெயா் மாற்றம், புதிய ரேஷன் அட்டை உட்பட 6 மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவா் கோவிந்தராஜ், எழுத்தா் குமாா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள், பல்வேறு துறை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

நாட்டறம்பள்ளி.... நாட்டறம்பள்ளி பேரூராட்சி 11 முதல்15-வது வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல்அலுவலா் ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா் இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ. தேவராஜி கலந்து கொண்டு ஆய்வு செய்தாா் . முகாமில் வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com