துத்திப்பட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

துத்திப்பட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பயனாளிக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்கிய மாவட்ட வளங்கள் அலுவலா் முருகேசன், ஊராட்சித் தலைவா் சுவித்த கணேஷ்.
Published on

பட விளக்கம்: பயனாளிக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்கிய மாவட்ட வளங்கள் அலுவலா் முருகேசன், ஊராட்சித் தலைவா் சுவித்த கணேஷ்.

ஆம்பூா், அக். 9: துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பழைய மனை சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் விஜய் வரவேற்றாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 450-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

முகாமில், வாா்டு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலா் பழனி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com