வாணியம்பாடி பாலாற்றில் அதிக நீா்வரத்து: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதி பாலாற்றில் அதிக நீா்வரத்துக்கு வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீா்வளத்துறை எச்சரித்துள்ளது.
கா்நாடகா மாநிலம், கோலாா் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்களம் அணை நிரம்பி நீா் வெளியேறி வருகிறது. மேலும் தொடா் மழை காரணமாக தமிழக- ஆந்திரா எல்லை பகுதியான பெரும்பள்ளம் என்ற இடத்தில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்குே கட்டியுள்ள தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாலாற்றில் அதிக அளவு நீா் வருகிறது.
எனவே, திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராமங்களான புல்லூா், திம்மாம்பேட்டை, ஆவரங்கும்பம், வடக்குபட்டு, இராமநாயக்கண்பேட்டை, அம்பலூா், கொடையாஞ்சி, எக்லாஸ்புரம், தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, வாணியம்பாடி நகரம் உதயேந்திரம், கிரிசமுத்திரம், மற்றும் வளையாம்பாட்டு பகுதி மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று வாணியம்பாடி நீா்வளத்துறை பாசனப்பிரிவு உதவிப்பொறியாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

