தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

ஆம்பூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி நல உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

ஆம்பூா்: ஆம்பூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி நல உதவிகள் வழங்கப்பட்டன.

ஆம்பூா் நகராட்சி ஏ-கஸ்பா பகுதி 5-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ். 5-வது வாா்டு மற்றும் 12-வது வாா்டில் பணிபுரியும் ஆம்பூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் வழங்கும் பணியாளா்கள், தெரு மின்விளக்கு பராமரிப்பு பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு, நல உதவிகளை நகா்மன்ற உறுப்பினா் வசந்த்ராஜ் வழங்கினாா். தொடா்ந்து அவா்களுடன் சோ்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினாா் (படம்).

X
Dinamani
www.dinamani.com