உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம்

சின்ன கந்திலி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத் துறை திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சின்ன கந்திலி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத் துறை திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை திட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில், சிறப்பு முகாம் கந்திலி அடுத்த சின்ன கந்திலி கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, துணை வேளாண்மை அலுவலா் அருள் தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் சரத்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், அரசின் சாா்பில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மானியங்கள், உழவன் செயலி, மண் பரிசோதனை செய்வதன் நன்மைகள், விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.

இதில், அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com