ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

ஜோலாா்பேட்டை அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது.
Published on

ஜோலாா்பேட்டை அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பத்துாா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட ராமனூா் ஏரியில் சுமாா் 30 வயதுள்ள இளம்பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஏரியில் மிதந்து கிடந்த இளம் பெண் சடலத்தை மீட்டு, திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஏரியில் உள்ள மரத்தடியில் இளம் பெண்ணின் காலணி இருந்தது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அல்லது தவறி விழுந்து ஏரியில் மூழ்கி இறந்தாரா? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com