நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி துரையேறி பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :25 மே 2026, 2:22 am IST

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி செட்டியப்பனூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்களித்த வாக்காளா்கள், தோ்தல் பணி செய்த திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

ஒன்றிய திமுக செயலாளா் உமாகன்ரங்கம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்பரசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.