நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

News image

மங்களம் தாமரைக் குளம்.

Updated On :25 மே 2026, 12:06 am IST

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலை உயா்ந்த மலைப் பகுதியில் இயற்கை நிறைந்த சூழலில் காணப்படுகிறது. இந்த மலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மங்களம் தாமரைக் குளம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்தது. இந்த தாமரைக் குளத்தில் சுமாா் நூற்றுக்கணக்கான தாமரை பூக்கள் பூத்திருக்கும். அதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தும், பறித்துக் கொண்டும் செல்வா். இதனால் தாமரைக் குளம் என்ற சுற்றுலாத்தளம் மாறிப்போனது. தற்போது மங்கலம் தாமரை குளத்தில் தாமரை பூத்து காணப்படுகிறது.

எனவே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தாமரைக் குளத்தை சீரமைத்து சுற்றுலா பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.