கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
By திருவள்ளூர் | Published on : 15th September 2014 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் உள்ள கைப்பேசி விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராம் (34). இவர் அப்பகுதியில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, கோவிந்தராம் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.