தேச நலனுக்காகவே வரி உயர்வு: ஆந்திர மாநில பாஜக தலைவர்

தேச நலனுக்காகவே வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான அரிபாபு தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

தேச நலனுக்காகவே வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான அரிபாபு தெரிவித்தார்.
செங்குன்றத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், ஆந்திர மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான அரிபாபு கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது. ஆனால், தற்போதைய பாஜகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் சிறிதளவு கூட ஊழல் இல்லை.
சர்வதேச விலை நிர்ணயத்தின் படியே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வரி உயர்வு தேச நலனுக்கானது. கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காகவே தங்கத்தின் மீது 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் பாஜகவுக்கு நல்ல வளர்ச்சி உள்ளது. தமிழக, ஆந்திர அரசுகளின் ஒப்பந்தத்தின் படி கிருஷ்ணா நதி நீர் பங்கீடு செய்துகொள்ளப்படுகிறது என்றார். இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம், புழல் ஒன்றிய பொறுப்பாளர் சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com