மாதவரம் மயான பூமி தாற்காலிகமாக மூடல்

மாதவரம் தெலுங்கு காலனி மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தாற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

மாதவரம் தெலுங்கு காலனி மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தாற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாதவரம் மண்டலத்தில் 27-ஆவது கோட்டத்தில் மாதவரம் தெலுங்கு காலனியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நவீன எரியூட்டு மயானம் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் ஜூன் 19 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 10 நாட்கள் தாற்காலிகமாக மூடப்பட உள்ளது.
இந்நாட்களில் அருகே உள்ள சீதாராம் நகர், கொடுங்கையூர் மயான பூமியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com