நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்தூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 5 நாள்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் அம்பத்தூரில் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏராளமான போலீஸார் அம்பத்தூர் ரயில் நிலையப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயிலில் பயணிகள்போல் வந்து இறங்கிய சட்டக்கல்லூரி
மாணவர்கள் 43 பேர் ரயில் மறியலுக்கு முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை, தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், மாணவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.