விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் வரும் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் வரும் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 
இதில் வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாக அளித்தால் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com