திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே செஞ்சி மதுரா கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு (40). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கிராமத்துக்கு அருகே உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, அங்கு பணியை முடித்துக் கொண்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் செல்லிடப்பேசியை மர்ம நபர்கள திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வேணு அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.